Pages

Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

June 21, 2011

ஞாபகத்தன்மையை மீளப்பெறமுடியுமா? ஒரு நரம்பியல் விஞ்ஞான ஆய்வின் முடிவு!

சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆய்வினடிப்படையில் இந்த பதிவு இடம்பெறுகின்றது. அது மூளை நரம்புகளுடன் தொடர்புடைய விஞ்ஞானம் அதாவது Neuro-Science பற்றிய ஓர் ஆய்வு. என்னால் இயன்றளவு இலகு தமிழில் இதனை தர முயல்கிறேன். இந்த ஆய்வு அறிக்கையை நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமேயானால் கீழே முடிவில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலமாக சென்று வாசிக்கலாம்.

ஞாபக மறதி?? 

இந்த ஆய்வின் கருப்பொள் ஞாபகசக்தியை இழந்த ஒருவருக்கு மீண்டும் அந்த பழைய ஞாபகசக்தியை கொண்டு வரமுடியுமா என்பதே! அப்படி எதாவது ஒருவிதத்தில் அது முடியுமானால் பலருக்கு அது  வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த தியோடர் பெர்கர் என்பவரும் அவரது சகாக்களுமாக சேர்ந்து ஞாபகசக்தியை இழந்த மூளையை எவ்வாறு rerestore அதாவது மீள பழைய நிலைக்கு கொண்டு வரமுடியுமென பல நாட்களாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் அவர்கள் ஆய்வுகூட எலிகளை வைத்து செய்த ஒரு ஆய்வு பலரையும் இவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது எனலாம்.
Prof Theodore Berger
ஒரு ஆய்வுகூட எலியின் மூளைப்பகுதியின் Hippocampus எனும் பகுதியில், அதாவது மூளையின் ஞாபகசக்தியை சேமித்திருக்கும் தொகுதியில் (Hippocampus என பெயர் வந்ததற்கு காரணம் அப்பகுதி ஒரு கடல்குதிரை வடிவில் அமைந்துள்ளதேயாகும். ஆங்கிலத்தில் கடல்குதிரையை hippocampus என அழைப்பது வழமை) மின்முனை (Electrode) பொருத்தப்பட்டு கணணியின் மூலம் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அதன் மூளையின் தொழிற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என பதிவுசெய்யப்பட்டது.
Hippocampus
பின்னர் ஒருவித இரசாயன பதார்த்தத்தை எலியினது hippocampus பகுதினுள் செலுத்தி ஞாபகசக்தியை தேடிச்செல்லும் நரம்பினை மூடச்செய்யப்பட்டது. பின்னர் அந்த குறிப்பிட்ட எலியை பழைய முன்பு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியை செய்யுமாறு தூண்டிய போது அந்த எலியினால் அதனை ஞாபகப்படுத்தி அதனை செய்ய முடியாது இருந்தமை அவதானிக்கப்பட்டது. 
மின்முனை மூலம் தொடர்பிலுள்ள எலி 
எவ்வாறாயினும் மீண்டும் மின்முனைகளின் உதவியுடன் முன்னமே பதிவு செய்யப்பட்டிருந்த அக்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான தொழில்பாடுகளை வழங்கியவுடன் அந்நிகழ்ச்சியை அவ்வெலிக்கு முன்னர் போன்று செய்ய முடிந்தமை அவதானிக்கப்பட்டது. இக்குறிப்பிட்ட நிகழ்வின் போது அவ்விரசாயன பதார்த்தம் தொடர்ந்து உள்ளே தான் இருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் பதிவு செய்த நிகழ்ச்சிக்கான தொழிற்பாட்டை வேறு தொழிற்பாடுகளுடன் கலந்து (after scrambling) மின்முனை ஊடாக கலந்து வழங்கிய போது அவ்வெலியினால் முன்னரே குறிப்பிட்ட அந்நிகழ்ச்சியை செய்ய முடியாது இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகூட பரிசோதனை முடிவின் பிரகாரம் தியோடர் பெர்கர் கூறியதாவது,

1.       மின்முனைகள் மூலமாக அந்நிகழ்ச்சி மீண்டும் செலுத்தப்பட்டபோது ஒரு சிறிய நேரமே அதாவது தற்காலிகமாகவே அவ்வெலியினால் அந்நிகழ்ச்சி நினைவு கூறப்பட்டது. இது மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2.      இந்த ஒரு நிகழ்ச்சி போன்று பல நிகழ்ச்சிகளை ஒன்றாக சேகரித்து வழங்கி ஆய்வு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

3.       மனிதர்களுக்கு பரிசோதிக்க முன்னர் பல்வேறுபட்ட வெவ்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

4.       மனிதர்களுக்கும் இவ்வாறு உட்புகுத்தலின் மூலம் நினைவுகளை, பேச்சாற்றல்களை மீண்டும் வரவைக்க முடியும்.

அதாவது பெரும்பாலான நபர்களினால் இவ்வாய்வு மனிதர்களுக்கும் பயன்மிக்கதாக அமையும் என நம்பப்படுகிறது. எது எவ்வாறாயினும் சில விடயங்களை மீண்டும் ஞாபகத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுவதே மேல் என நான் நினைக்கிறேன். எனினும் பரவலாக நன்மையை மட்டும் நோக்குமிடத்து இவ்வாய்வு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன்.


Source:
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

January 14, 2011

பொங்கலோ பொங்கல் - வெள்ளமோ வெள்ளம்

இதுவே இந்த வருடத்தின் எனது முதல் ப்ளாக் என்ட்ரி.

வெள்ளம், நிவாரணம், கல்வி, உத்தியோகம், குடும்பம் என சற்றே பிசியாக இருந்துவிட்டேன். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்னமும் மழை விடாப்பிடியாக பெய்து கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கில் மக்கள் உறையுள், சொத்து, உறவு என அனைத்தையும் இழந்து நிவாரண மையங்கலினுள் உள்வாங்கபட்டுள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மரண ஓலம் போன்றது போலவே சத்தம். எத்தனையோ வருடங்கள் சேமித்த சொத்துக்கள் கண் முன்னே வெள்ளம் அழிப்பதை பார்த்துகொண்டு இருக்க யாரால் தான் முடியும்.



எமது அலுவலகம், மற்றும் நண்பர்கள் வட்டாரத்தினர் ஒன்று சேர்ந்து எம்மாளியன்ற உதவிகளை, குறிப்பாக குழந்தைகள், தாய்மார்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை நகரிலுள்ள கிண்ணியா எனும் பிரதேசத்திலுள்ள மக்களிடம் கொண்டு சேர்த்தோம். அங்கு போன பின்பு தான் எமக்கு அது உண்மையாகவே உறைத்தது. நாம் கொண்டு சேர்த்த பொருட்கள் ஒரு சிறு கூட்டத்தாருக்கே போதுமாக இருந்தது. மக்களோ சாரை சாரையாக, கூட்டம் கூட்டமாக பெருகி இருந்தார்கள். எம்மை போன்ற பலர் தலைநகரிலிருந்தும் இலங்கையின் பிற மாவட்டங்களிலிருந்தும் நிவாரண உதவிகளோடு வந்திருந்தார்கள்.

குறிப்பாக அவற்றை பங்கீடு செய்வதில்தான் அப்பப்பா எத்தனையோ சிக்கல்கள். இது ஒரு அவசரகால நிவாரணத்தில் சகஜம்தான், என்றாலும் சரியாக தேவைப்படும் மக்களுக்கு போய் சேருமா என்பது ஐயமே. உடல் வலிமை, பலம் உள்ளவர்கள் மாத்திரமே முன் வந்து அடித்து பிடித்து பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க கூடியதாக இருந்தது. மனத்தை அது ரணமாக்கியது. அரசாங்க நிவாரணத்தையும் சிறிதளவில் பார்க்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னமும் நிறைய அளவில் அது தேவையானதாக இருக்கிறது.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கிறாகள் என்று கூறுவதற்கு எனக்கு விருப்பமாக இருந்தாலும், உண்மை அதுவில்லையே. எத்தனையோ பேர்கள் தமது சொந்தங்களை, சொத்துக்களை இழந்து பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். இன்று பொங்கல் தினமா என்பதை கூட கற்பனை செய்து பார்க்க முடியாதவர்கள் பலர் உண்டு. எப்படி எப்படியெல்லாம் குழந்தைகள், குடும்பத்தினரோடு கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தவர்கள் பலருக்கு அப்பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்கவில்லை. கிட்டவில்லை.

பிரிஸ்பேன் வெள்ளம்
இயற்கையின் சீற்றம் இலங்கையில் மாத்திரமல்ல, இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளையும் இந்த புது வருடத்தில் தாக்கியுள்ளது குறிப்பாக பிரிஸ்பேனில் வெள்ளம், பிரேசிலில் மண்சரிவு. எந்த செய்தி சேவையை திறந்தாலும் இந்த நாட்டில் இவ்வளவு பேர் இறப்பு என்ற செய்தியே கண்முன்னே தெரிகின்றது.
பிரேசிலின் பாரிய மண்சரிவு

பல இடங்களில் தாழ்அமுக்கமும், அதன் காரணமாக தொடர்ச்சியான இடைவிடாத மழையுமே இச்சீற்றத்திற்கெல்லாம் காரணம். லா நினா (La Nina), எல் நினோ (El Nino) போன்ற காலநிலை மாற்றங்கலினாலேயே இவ்வாறெல்லாம் நிகழ்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றங்களுக்கு நாமே முக்கிய காரணம். அதாவது பச்சைவீட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாயுக்கள் (Greenhouse gases) வளிமண்டலத்தை அடைவது இப்போது என்றுமில்லாதவாறு உச்சத்தை அடைந்துள்ளது. யார் யாரோ செய்யும் பாவம் யார் யாரையோ தாக்குகிறது. 

அதனால் நாம் இயன்றளவு உலக வெப்பமயமாதலுக்கு (Global Warming) ஏதுவாக அமையும் வாயுக்கள் வெளியேற்றத்தை மிகவும் குறைக்க முயற்சிக்க வேண்டும். இது பற்றிய கற்கைகள் ஆய்வுகளை முடியுமான அளவு வாசிக்க வேண்டும். இது பற்றிய அறிவை குடும்பத்தினருக்கு, மற்றும் நண்பர்களுக்கு பகிர வேண்டும். 

இதனை வாசிக்கும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் நமக்காக நாம் ஆவோம். 

 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 28, 2010

உலகின் மிக சிறிய ஆவர்த்தன அட்டவணை



இந்த வீடியோவில் உள்ளதுவே உலகின் மிகச்சிறிய ஆவர்த்தன அட்டவணை ஆகும். ஒரு தனி தலைமுடியில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் ஐக்கிய ராச்சியத்தின் நோட்டிங்கம் பல்கலைகழகத்தை சேர்ந்த இரசாயனவியல் பேராசிரியர் மார்டின் போலியகொப் ஆவார்.

முதலில் இலத்திரனியல் நுண்நோக்கி (Electron Microscope) மூலம் அந்த தலைமுடியை பெரிதாக்கி பின்னர் அயனி பரிமாற்ற கற்றைகள் எழுத்துரு (Ion Beam writer) மூலமாக ஆவர்த்தன அட்டவணையை அப்படியே அம்முடியில் பதிவு செய்ததன் மூலமாக இச்சிறிய ஆவர்த்தன அட்டவணையை உருவாக்க முடிந்ததாக பேராசிரியர் தெரிவித்தார்.

Source: new scientist tv
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 16, 2010

பறக்கும் வாகனம் - ஹம்வீ

வாகனங்கள் பறப்பது சினிமாவில் சாத்தியம், இதனை நாம் பல சை-பை (Sci-fi) சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். எனினும் நாம் இதுவரை ரியாலிடியில் இவற்றை பார்த்தது கிடையாது. இவற்றையெல்லாம் உடைத்தெறிய இப்போது அமெரிக்காவின் டார்பா (DARPA) எனப்படும் Defence Advanced Research Project Agency தயாராகி வருகின்றது. ஹம்வீ (HUMVEE) எனப்படும் High Mobility Multipurpose Wheeled Vehicle ஐயும் ஹெலிகாப்டர் ஐயும் ஒன்றுசேர்த்து டிஎக்ஸ் (TX) எனப்படும் புதிய பறக்கும் வாகனம் தயாரிக்கும் முயற்சியில் டார்பா தயாராகி வருகிறது.
Humvee
இந்த டிஎக்ஸ் ரக வாகனம் தரையில் மணிக்கு 65 மைல்கள் வேகத்திலும், வானத்தில் மணிக்கு 150 மைல்கள் வேகத்திலும் செல்லவல்லது. எனினும் இது தரையில் செல்லக்கூடிய உச்ச வேகத்தை கொண்ட மிலிட்டரி வாகனங்களின் வேகத்தை விட குறைந்ததாகவும், மிலிட்டரி ஹெலிக்கொப்டர்களின் வேகத்தை விடவும் குறைவாகவும் இருப்பது சற்றே பின்னடைவே. இது தரையிலும், வானத்திலும் ஒரு சராசரியயான வாகனமே. இந்த வாகனம் துருப்புக்களை ஏற்றி செல்லும்போது எதிரிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானால் பெரிய பாதிப்புக்கள் இன்றி உடனடியாக தரையிறக்கம் செய்யக்கூடியதாக இருப்பதும் பின்னர் அதிலிருந்து தப்பிச்செல்ல கூடியதாக இருப்பதுமே இதனது பிளஸ் பாயிண்ட் ஆகும்.
TX
இதனை தரையில் பாவிக்கும் போது ஹெலிகாப்டர் பிலேட்ஸ் (Blades) உள்நோக்கி வரும் வண்ணம் டிசையின் செய்யப்பட்டுள்ளது. டிஎக்ஸ் ஒன்றின் பெறுமதி சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இது 2015 இல் பாவனைக்கு வருமெனவும் கூறப்படுகிறது.          
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 10, 2010

கனவுகளை பற்றிய சில உண்மைகள்


கிறிஸ்டோபர் நோலனின் படமான Inception வெளிவந்ததிலிருந்து பலர் கனவுகள் பற்றி ஆராய தொடங்கி விட்டார்கள். அதிலே நானும் ஒருவன். அந்த படத்தில் எவ்வாறு ஒருவரின் கனவினுள் சென்று அவர் பற்றிய தகவல்களை லியனார்டோ டி காப்ரியோவும் அவரது டீமும் தேடுவார்கள் என்பதே அப்படத்தின் கதை. மிக சிறந்த தொழில்நுட்ப திரைப்படமான அது பலரது பாராட்டுக்களை இப்போதே பெற்றுவிட்டது.

அந்த திரைப்படத்தால் அடைந்த தாக்கத்தினால்தான் கனவுகள் பற்றிய எனது சிறிய ஆராய்ச்சி தொடங்கியது. அந்த ஆராய்ச்சி சிறப்பாக போகுமேயானால் பிறிதொரு பதிவில் அவை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒரு மனிதனின் சராசரி ஆயுள்காலத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் நித்திரையில் கழிகின்றது. இன்று இந்த பதிவில் கனவுகள் பற்றிய சில அரிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.


கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 5, 2010

சஹாரா பாலைவன திட்டம் மூலம் 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசி மின்சக்தி தேவை நிறைவேற்றப்படுமாம்

மத்திய கிழக்கு மற்றும் உலகின் இதர பாகங்களில் காணப்படும் எரிபொருள் என்றாவது ஒரு நாளைக்கு முடியத்தான் போகிறது. எரிபொருள் என்ன எடுக்க எடுக்க நீர் போன்று ஊறுகின்ற ஒரு பொருளா? இல்லையே. அப்போ இந்த எரிபொருள் எல்லாம் ஒருநாள் முடிந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நாம் எல்லோருமே எப்போவாவது எங்களுக்குள் அல்லது மற்றவர்கள் மத்தியில் உரையாடியிருப்போம். அதில் பல பேர் முடிவும் (result) கண்டிருக்கமட்டோம்.

இங்கு தான் எரிபொருளுக்கான பிரதியீடு (Substitution for fuel) பற்றிய கவலை உண்டாகின்றது. எரிபொருள் பிரதியீடாக பலவற்றை கூறலாம். உதாரணமாக சூரியசக்தி, அணுச்சக்தி, காற்றின் சக்தி, அலைகளின் சக்தி ஏன் மிக அண்மையில் மின்னலை கூட பயன்படுத்த முடியும் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் இவை எல்லோருக்குமே உகந்ததாக இல்லை. ஆயினும் நாம் தற்போது பயன்படுத்தும் எரிபொருள் முடிவடையுமேயானால் நமக்கு வேறு வழியில்லை அடுத்த பிரதியீடுகளுக்கு செல்வதை தவிர. இதற்காகவே உலகின் வல்லரசு நாடுகள் பல மில்லியன் டாலர்களை ஆய்வுகளுக்காக செலவழிக்கின்றன. இது காலத்தின் தேவையும் கூட.

இந்த பதிவு அதுபோன்ற எரிபொருள்/மின்சக்தி பிரதியீடு சம்பந்தமான ஒரு ஆய்வு பற்றியது.

JST எனப்படும் Japan Science and Technology Agency ம் JICA எனப்படும் Japan International Cooperation Agency ம் இணைந்து செயற்படுத்தும் இந்த ஆய்வுக்கு சஹாரா சூரியசக்தி வளர்ப்பு திட்டம் (Sahara Solar Breeder Project) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய அல்ஜீரிய பல்கலைகழகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் உலகின் மிக பெரிய பாலைவனமான சஹாராவை 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசிக்கு மேலான மின்சக்தியை (அதாவது சூரியசக்தி மூலமான மின்சக்தியை) உண்டாக்க வள்ள இடமாக மாற்றுவதே நோக்காகும்.

சரி இப்போ இதன் அடிப்படையை பற்றி பார்ப்போம். சூரியசக்தியை பெறுவதற்கு சூரியகலங்கள் உருவாக்கப்படவேண்டும். சூரியகலங்களின் அடிப்படை மூலம் (Basisbasis) சிலிக்கன் (சிலிக்கா அல்லது சிலிகான் டைஒக்சயிட் எனவும் கூறலாம்) எனப்படும் இரசாயண பதார்த்தம் ஆகும். இந்த சிலிக்கா சில வகையான மணலிலிருந்தே எடுக்கபடுகிறது. அதாவது சஹாரா பாலைவனத்தில் இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் சிலிக்கன் ஐ பாவித்து உண்டாக்கபடும் சூரியகலங்களில் இருந்தே மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இது பற்றி டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த Hideomi Koinuma கூறும்போது, சஹாரா பாலைவனத்தில் மிக தூய்மையான (high quality) சிலிகான் இருப்பதாகவும், உலகில் இதற்க்கு முன் இது போன்ற ஒரு ஆய்வு நடத்த படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் இதன்மூலம் உருவாக்கப்படவுள்ள மின்சாரத்தை high-temperature superconductors மூலமாக பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் இழப்புக்கள் இன்றி கடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.


தற்போது இத்திட்டம் பற்றிய முன்னோட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருகின்றன. அதில் இவர்கள் முகம் கொடுக்கவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அதற்கான பதிலீடு எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியும் அதிகமாக கவனம் எடுக்கபடுகிறது. மேலும் பாலைவனங்களில் உருவாகும் மணல்காற்றே (Sand-storm) மிக முக்கியமான பிரச்சினையாகவும் கூறபடுகிறது.


எது எவ்வாறாயினும் இது நடைமுறை படுத்தும் போது மேலும் பல எதிர்பாக்காத இன்னல்கள் வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பினும் இவற்றை எல்லாம் வெற்றி கொண்டு இந்த ஆய்வு மனித குலத்திற்கு பயனளிக்க வள்ளதாக அமைய எமது வாழ்த்துக்கள். 
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 2, 2010

சண் பிரான்சிஸ்கோவின் ஈய வளி மாசடைதலில் (Lead Air Pollution) 1/3 ஆசியாவின் பங்கு.

சூழல் மாசடைதலை நெறியாள்வது என்பது மிகப்பெரிய வேலை. இந்த நிமிடத்தில் உலகின் பெரும்பான்மையினரின் சிந்தனையும் அதுவே. மாசுபடுதலை முற்றாக தவிர்த்தல் என்பது முடியாத காரியம், ஆனால் அதனை சரியான நெறியாள்கையில் கட்டுபடுத்த முடியும். இது பற்றிய கற்றல்கள் இன்று பெரு முக்கியம் பெற்று இருக்கின்றன என்பதுவே இதனவசியத்திற்கான சாட்சி. 

வாயு அல்லது வளி மாசடைதல் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள் ஆங்கிலத்தில் air pollution என்று கூறுவார்கள். இதற்கான சரியான வரையறை பின்வருமாறு. 

வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும். இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்துவதுடன், சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கின்றது. (நன்றி: விக்கிபீடியா) 



உலகின் எங்கோ ஒரு மூலையில் வெளியாகும் வாயுக்கழிவு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை மாசடைய வைக்க கூடியது. மிக அண்மையில் அமெரிக்க DOE (Dept of Energy) ஐ சேர்ந்த விஞ்ஞானிகளினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக திடுக்கிடும் உண்மைகள் பல தெரிய வந்துள்ளன. இவ்வாறான ஒரு ஆய்வு நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என Lawrence Berkeley National Laboratory சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். சண் பிரான்சிஸ்கோவின் இரு முக்கிய இடங்களில் செய்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஈய துகல்களினது (Lead Particles) மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு  ஆசிய கண்டத்தை சேர்ந்தது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இவை பெரும்பாலும் சீனாவிலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஏழாயிரம் மைல் தொலைவிலிருந்து வந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

சீனாவில் இவ்வாறான வாயு கழிவு வெளியேற்றம் பெருமளவில் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகின் பெருமளவு Manufacture related Outsourcing அங்கு நடப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். எது எவ்வாறு இருப்பினும், ஒரு நாட்டின் வாயு கழிவுகள் அயல் நாடுகள் பலவற்றை நாசமாக்குவது ஏற்றுக்கொள்ளகூடிய விடயமன்று. சீனா மாத்திரமன்று, அமெரிக்காவின் coal plants இலிருந்து வெளியாகும் பல்வேறு வாயு கழிவுகளினால் உலகம் முழுவதுமே பாதிப்பினை எதிர்நோக்குகின்றது. 



இவ்வாறான நடவடிக்கைகளினால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஒட்சயிட்டின் (CO2) செறிவு அதிகரிக்கின்றது. வளிமண்டலத்திற்கு தெரிவதில்லை எந்த எந்த நாடுகளின் வாயு கழிவுகள் தன்னை வந்து அடைகின்றன என்பது. ஆனால் இதனால் உண்டாகும் உலகின் காலநிலை மாற்றம் உலகின் எல்லா நாடுகளிற்கும் பொதுவானதே. 

இதற்கு சரியான தீர்வு, உலகின் வாயு கழிவுகளின் சரியான நேறியாள்கையே. ஆனால் உண்மையில் இது சரியாக நடப்பதில்லை. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 29, 2010

மீள் சுழற்சி பைகளும் (Re-usable Bags) சூழலிற்கு நல்லதல்ல - ஆய்வு முடிவு

நெடுங்காலமாக கடதாசி, பொலிதீன் பைகளினால் பல்வேறு பட்ட சூழலியல் பிரச்சனைகளுக்கு இவ்வுலகம் முகம் கொடுத்து வந்ததை அனைவரும் அறிவர். இவை உக்குவதர்க்கு நெடும்காலம் எடுக்குமெனவும், மலை நீரினை புவிக்குள் செல்வதனை தடுக்கும் எனவும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அவை மேல் இருந்தாலும் அவை பாவனைக்கு இலகுவாகவும் விலை மிக குறைவாகவும் (துணியினால் செய்த பைகளுடன் ஒப்பிடும் போது) இருந்தமையினால் பலராலும் வெகுவாக பாவிக்கப்பட்டு வந்தது. 





பின்னர் மீள் சுழற்சி பைகளின் அறிமுகம் அதற்கு சரியான தீர்வாக அமைந்தது என பல்வேறு பட்ட சுகாதார, சூழலியல் ஆராய்சிகள் உறுதி செய்ததை அடுத்து பலரும் பரவலாக அதனை பாவிக்க தொடங்கினர். சூழல் பற்றிய கண்ணோட்டம் போது மக்களிடையே பெருமளவு ஆதரவினை பெற்றது. எங்கும் Go Green கோஷம் காதை பிளந்தது எனலாம். இதனை தொடர்ந்து உலகின் வொர்க் சொப் (world's workshop) எனப்படும் சீனாவிலிருந்து பல்வேறுபட்ட டிசைன்களுடனான பைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. அமெரிக்க ஐரோப்பிய நகரங்களில் இவைகள் மிக பிரபல்யம் அடைந்தன எனலாம்.  



இப்போது திடீரெண்டு பூகம்பம் மூண்டாற்போல் மீள் சுழற்சி பைகளும் சூழலிற்கு நல்லதல்ல என புதியதொரு ஆய்வு தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அட்செய்தி மேலும் குறிப்பிடுகையில் மீள் சுழற்சி பைகளில் ஈயம் (lead) அடங்கியிருப்பதாகவும் அது நிலக்கீழ் நீரை (ground-water) அடையும் போது பெரும் பாதிப்புக்கள் நிகழலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. 

எது எவ்வாறாயினும் இதற்கு தகுந்த பிரதியீட்டை கண்டு பிடிக்கும் வரை இதன் பாவனையே உபயோகத்தில் இருக்குமெனவும் அட்செய்தி மேலும் தெரிவிக்கிறது. பொலிதீன், கடதாசி, பிளாஸ்டிக் போன்றவைகளின் பாதிப்பினை விட இதன் பாதிப்பு குறைவாக இருப்பதனாலேயே இவ்வாறு கூறப்படுகிறது. யாருக்கு தெரியும் இதற்கு பிறகு மீண்டும் துணிகளாலான பைகளே பாவனைக்கு வருகின்றனவோ என்னவோ. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...