Pages

December 29, 2010

அடுத்த மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) யார்?

பேஸ்புக் என்றால் இன்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்கும். இதனை கேள்வியுராதவர்கள் பொது அறிவு கொஞ்சமுமே இல்லாதவர்கள் என்று கூறலாம். அப்பேர் பட்ட இந்த பேஸ்புக் உருவாக காரண கர்த்தாவாக இருந்தவரே  இந்த Mark Zuckerberg ஆவார். உலக புகழ் பெற்ற ஹவார்ட் பல்கலைகழகத்தில் கல்வி கற்ற இவர் அக்காலத்திலேயே இந்த பேஸ்புக்கை உருவாக்கினார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். 

பலர் மிக அண்மையில் வெளிவந்த ஹொலிவூட் திரைப்படமான the Social Networkஐ பார்த்திருப்பீர்கள். அது முழுமையாக இல்லாவிட்டாலும், அநேகமான இடங்களில் Mark Zuckerberg இன் வாழ்க்கையுடன் ஒத்துபோகின்ற ஒரு சினிமா படைப்பு. அதில் இவர் எவ்வாறு இதனை உருவாக்கினார், மற்றும் அதற்காக எடுத்துக்கொண்ட சிரமங்கள் என்ன என மிக அழகாகவும் ஆழமாகவும் இயக்குனர் David Fincher காட்டியிருந்தார். மிக அண்மையில் உலக பிரசித்தி பெற்ற டைம்ஸ் சஞ்சிகை இந்த ஆண்டின் சிறப்பான மனிதர் பட்டத்தை Zuckerbergக்கு வழங்கி கௌரவித்தது. 

எல்லோருமே அறிந்த டெல் (Dell) கணனிகளின் ஸ்தாபகர் Michael Dell இள வயதிலேயே பல சாதனைகளை புரிந்தவர். மருத்துவ கல்வியை மேற்கொண்டு இருந்த அவர் டெல் கணனிகளின் பிரசித்திக்கு  பின்னர் மருத்துவ படிப்பினை துறந்து முழுநேரமும் வியாபாரத்திலேயே மூழ்கியவர். அந்தகாலத்தில் இனியும் ஒருவர் இவர் போல வரமுடியாது என்று பலரும் நினைத்திருந்தார்கள். எனினும் சிறு காலத்திலேயே அவரை விடவும் மிக இளையவயதில் சிறப்பான முறையில் வியாபாரத்தை பெருக்கி காட்டினார் Mark Zuckerberg.  

ஆகவே இந்த Mark Zuckerberg ஐயும் விழுங்க கூடிய ஜாம்பவான்கள் பலர் உருவாகுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சரி, அவ்வாறு அந்த இடத்தினை அடையக்கூடியவர்கள் என்ற வரிசையில் இருக்கின்ற ஐவரை பற்றியதே இந்த பதிவு.

1.      பிரென்ட் ஸ்கோடா (Brent Skoda)

இவர் உடற்கட்டுக்கான சமூக வலையமைப்பு தள (collegefitness.com) நிறுவனர். 22 வயதான இவர் பல்கலைகழகத்தின் இரண்டாவது வருடம் படிக்கும்போதே இந்த தளத்தை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி இவரது தளம் சுமார் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக அறிவிக்கவட்டுள்ளது. மேலும் கூகிள் மற்றும் ஒக்லோகொமா பல்கலைகழகத்தின் கூட்டு உதவியின் காரணமாக கிட்டத்தட்ட சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கபெற்றுள்ளது.

எல்லோருமே உடற்கட்டுடன் இருப்பதன் அவசியம் இப்போது கூடிக்கொண்டு வருகின்றபடியினால் இவரது தளத்திற்கு மேலும் ஆதரவு பலமடங்கு கூடலாம் என்று கருதப்படுகிறது.


2.      டேவ் & கத்ரின் கூக் (Dave and Cathrine Cook)

இந்த கூக் சகோதரர்கள் எனது ஆண்டுப்புத்தகம் தள (myyearbook.com) உரிமையாளர்கள் ஆவர். இந்த தளம் தற்போதைய நிலவரப்படி சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக கூறப்படுகிறது. பேஸ்புக்கின் மாதிரியில் அமைந்துள்ள இத்தளம் தற்போது அமெரிக்காவில் வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
  

3.      மாட்டி நிபெல்சுட்ஸ் (Matti Niebelschutz)

ஜெர்மனியை சேர்ந்த சட்டத்துறை மாணவரான இவர் என்னுடைய வாசனைதிரவியம் தள (myparfeum.com) நிறுவனர். இந்த தளத்தின் சிறப்பம்சம் என்னவெனில் எங்களுக்கு வேண்டிய வாசனைதிரவியத்தை நாங்களே விருப்பப்படி உருவாக்கிகொள்ள முடியும். இந்த தளம் தற்போது ஜெர்மனியையும் தாண்டி இதர ஐரோப்பிய நாடுகளிலும் செல்வாக்கு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4.      பெண் மெக்கீன் & டேன் லீஹை (Ben Mclean & Dan Leahy)

இவர்கள் villagevines.com தளத்தின் உரிமையாளர்கள். அமெரிக்காவின் ஆறு முக்கிய நகரங்களிலுள்ள பிரபலமான உணவுவிடுதிகளில் எமக்கு பிடித்தமான உணவுவகைகளை சற்றே குறைந்த விலையில் பெற்று தருவதே இந்த தளத்தின் நோக்காகும். பிரபல்யமான உணவு விடுதிகளுன் கூட்டு சேர்ந்தே இந்த வியாபாரத்தை இவர்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நியூயார்க்கில் மாத்திரமே இவர்களது சேவை இருந்தது, பின்னர் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பின் காரணமாக மேலும் முக்கிய ஐந்து நகரில் தற்போது இவர்களின் சேவையை பெறக்கூடியதாக இருக்கிறது.


5.      ஹசன் ஹம்டான் (Hassan Hamdan)

பலஸ்தீனிய நாட்டை பிறப்பிடமாக கொண்ட இவர் சவூதியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளை மையமாக கொண்டு இவர் தொழினுட்பத்திநூடாக இ மார்கடிங், இலகு தகவல் பரிமாற்றம் போன்றவைகள் அடங்கியாதாக உள்ள ஒரு தளத்தினை ஆரம்பித்து செயற்பட்டு வருகிறார். இவருக்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடுகளுக்கும் இதன் சேவையை வழங்க தற்போது முன்வந்துள்ளதாக மேலும் கூறப்படுகிறது.     

எது எவ்வாறாயினும் Mark Zuckerberg இன் இடத்தினை அடைவதற்கு இவர்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.     

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 28, 2010

மனைவியின் ஈமெயிலை வாசித்தமைக்காக கணவனுக்கு சிறை

மனைவியின் ஜிமெயில் கணக்கின் பாஸ்வோர்ட்டை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்த கணவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் மிச்சிகன் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி போலீஸ் மேலும் விவரிக்கையில் லியோன் வால்கர் என்பவர் ஒரு கம்ப்யூட்டர் தொழில்நுட்பவியலாளர், இவரது மனைவியான கிளாரா வால்கர் அவரது முன்னைய கணவருடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தே லியோன், கிலாராவின் மடிகணணியை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்துள்ளார். ஆனாலும் இது அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் மற்றவர்களின் அடையாளங்களை திருடும் குற்றத்தினுள் உள்வாங்கிய நீதிமன்றம் இவருக்கு இத்தண்டனையை விதித்துள்ளது.

இந்நிகழ்வு நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே லியோன், கிளாரா தம்பதியினருக்கு விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது தன்னுடைய மடிகணணி என்றும் பாஸ்வோர்ட் தன்னை தவிர வேறு யாருக்குமே தெரியாது எனவும் கிளாரா கூறியதன் அடிப்படையிலேயே லியோனுக்கு இத்தண்டனை உறுதியாகியுள்ளதாக டிற்றோயட் போலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

so, தம்பதியினரே இது உங்களுக்கும் நிகழலாம். கவனமாக இருங்கள். ஹீ ஹீ ஹீ.


source: Washington Post
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

உலகின் மிக சிறிய ஆவர்த்தன அட்டவணை



இந்த வீடியோவில் உள்ளதுவே உலகின் மிகச்சிறிய ஆவர்த்தன அட்டவணை ஆகும். ஒரு தனி தலைமுடியில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் ஐக்கிய ராச்சியத்தின் நோட்டிங்கம் பல்கலைகழகத்தை சேர்ந்த இரசாயனவியல் பேராசிரியர் மார்டின் போலியகொப் ஆவார்.

முதலில் இலத்திரனியல் நுண்நோக்கி (Electron Microscope) மூலம் அந்த தலைமுடியை பெரிதாக்கி பின்னர் அயனி பரிமாற்ற கற்றைகள் எழுத்துரு (Ion Beam writer) மூலமாக ஆவர்த்தன அட்டவணையை அப்படியே அம்முடியில் பதிவு செய்ததன் மூலமாக இச்சிறிய ஆவர்த்தன அட்டவணையை உருவாக்க முடிந்ததாக பேராசிரியர் தெரிவித்தார்.

Source: new scientist tv
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 16, 2010

பறக்கும் வாகனம் - ஹம்வீ

வாகனங்கள் பறப்பது சினிமாவில் சாத்தியம், இதனை நாம் பல சை-பை (Sci-fi) சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். எனினும் நாம் இதுவரை ரியாலிடியில் இவற்றை பார்த்தது கிடையாது. இவற்றையெல்லாம் உடைத்தெறிய இப்போது அமெரிக்காவின் டார்பா (DARPA) எனப்படும் Defence Advanced Research Project Agency தயாராகி வருகின்றது. ஹம்வீ (HUMVEE) எனப்படும் High Mobility Multipurpose Wheeled Vehicle ஐயும் ஹெலிகாப்டர் ஐயும் ஒன்றுசேர்த்து டிஎக்ஸ் (TX) எனப்படும் புதிய பறக்கும் வாகனம் தயாரிக்கும் முயற்சியில் டார்பா தயாராகி வருகிறது.
Humvee
இந்த டிஎக்ஸ் ரக வாகனம் தரையில் மணிக்கு 65 மைல்கள் வேகத்திலும், வானத்தில் மணிக்கு 150 மைல்கள் வேகத்திலும் செல்லவல்லது. எனினும் இது தரையில் செல்லக்கூடிய உச்ச வேகத்தை கொண்ட மிலிட்டரி வாகனங்களின் வேகத்தை விட குறைந்ததாகவும், மிலிட்டரி ஹெலிக்கொப்டர்களின் வேகத்தை விடவும் குறைவாகவும் இருப்பது சற்றே பின்னடைவே. இது தரையிலும், வானத்திலும் ஒரு சராசரியயான வாகனமே. இந்த வாகனம் துருப்புக்களை ஏற்றி செல்லும்போது எதிரிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானால் பெரிய பாதிப்புக்கள் இன்றி உடனடியாக தரையிறக்கம் செய்யக்கூடியதாக இருப்பதும் பின்னர் அதிலிருந்து தப்பிச்செல்ல கூடியதாக இருப்பதுமே இதனது பிளஸ் பாயிண்ட் ஆகும்.
TX
இதனை தரையில் பாவிக்கும் போது ஹெலிகாப்டர் பிலேட்ஸ் (Blades) உள்நோக்கி வரும் வண்ணம் டிசையின் செய்யப்பட்டுள்ளது. டிஎக்ஸ் ஒன்றின் பெறுமதி சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இது 2015 இல் பாவனைக்கு வருமெனவும் கூறப்படுகிறது.          
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 15, 2010

2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு.

சீனாவின் அகழ்வாராய்ச்சியாளர்கள் 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் குடிக்கும் பாத்திரம் ஒன்றை சியான் (Xian) மாகாணத்தில் கண்டெடுத்துள்ளர்கள். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அப்பாத்திரத்தில் அந்த காலத்தில் குடித்த சூப்பின் மிகுதி அப்படியே உறைந்து காணப்படுகிறது.

ஒரு விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்பாத்திரத்திலுள்ள உறைந்த நிலையிலுள்ள சூப்பில் என்ன என்ன அடங்கியிருக்கிறது என்பதனை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் முடிவின் மூலம் அன்றைய மக்கள் என்ன வகையான உணவுகள் உட்கொண்டனர் என்பதனை அறிய முடியும் எனவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.


இது மாதிரியான பாத்திரம் ஒன்றை உறைந்த நிலையில் எடுத்திருப்பது சீன வரலாற்றிலேயே முதல் தடவையாகும் என ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம் கி.மு. 475-221 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்பதனை அறியலாம்.

சியான் மாகாணம் சீனாவின் ஆக தொன்மையான நகரங்களில் ஒன்றாகும், அதற்கு 3100 வருடங்கள் பிற்பட்ட வரலாறு பல உண்டு. இந்நகரம் சுமார் 1100 வருடங்கள் சீனாவின் தலைநகராகவும் இருந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இந்த சூப் உறைந்த நிலையுள்ள பாத்திரத்துடன் ஒரு வாசனைகள் அற்ற திரவம் அடங்கிய குடுவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது வயின் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

         
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 10, 2010

கனவுகளை பற்றிய சில உண்மைகள்


கிறிஸ்டோபர் நோலனின் படமான Inception வெளிவந்ததிலிருந்து பலர் கனவுகள் பற்றி ஆராய தொடங்கி விட்டார்கள். அதிலே நானும் ஒருவன். அந்த படத்தில் எவ்வாறு ஒருவரின் கனவினுள் சென்று அவர் பற்றிய தகவல்களை லியனார்டோ டி காப்ரியோவும் அவரது டீமும் தேடுவார்கள் என்பதே அப்படத்தின் கதை. மிக சிறந்த தொழில்நுட்ப திரைப்படமான அது பலரது பாராட்டுக்களை இப்போதே பெற்றுவிட்டது.

அந்த திரைப்படத்தால் அடைந்த தாக்கத்தினால்தான் கனவுகள் பற்றிய எனது சிறிய ஆராய்ச்சி தொடங்கியது. அந்த ஆராய்ச்சி சிறப்பாக போகுமேயானால் பிறிதொரு பதிவில் அவை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒரு மனிதனின் சராசரி ஆயுள்காலத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் நித்திரையில் கழிகின்றது. இன்று இந்த பதிவில் கனவுகள் பற்றிய சில அரிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.


கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 5, 2010

சஹாரா பாலைவன திட்டம் மூலம் 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசி மின்சக்தி தேவை நிறைவேற்றப்படுமாம்

மத்திய கிழக்கு மற்றும் உலகின் இதர பாகங்களில் காணப்படும் எரிபொருள் என்றாவது ஒரு நாளைக்கு முடியத்தான் போகிறது. எரிபொருள் என்ன எடுக்க எடுக்க நீர் போன்று ஊறுகின்ற ஒரு பொருளா? இல்லையே. அப்போ இந்த எரிபொருள் எல்லாம் ஒருநாள் முடிந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நாம் எல்லோருமே எப்போவாவது எங்களுக்குள் அல்லது மற்றவர்கள் மத்தியில் உரையாடியிருப்போம். அதில் பல பேர் முடிவும் (result) கண்டிருக்கமட்டோம்.

இங்கு தான் எரிபொருளுக்கான பிரதியீடு (Substitution for fuel) பற்றிய கவலை உண்டாகின்றது. எரிபொருள் பிரதியீடாக பலவற்றை கூறலாம். உதாரணமாக சூரியசக்தி, அணுச்சக்தி, காற்றின் சக்தி, அலைகளின் சக்தி ஏன் மிக அண்மையில் மின்னலை கூட பயன்படுத்த முடியும் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் இவை எல்லோருக்குமே உகந்ததாக இல்லை. ஆயினும் நாம் தற்போது பயன்படுத்தும் எரிபொருள் முடிவடையுமேயானால் நமக்கு வேறு வழியில்லை அடுத்த பிரதியீடுகளுக்கு செல்வதை தவிர. இதற்காகவே உலகின் வல்லரசு நாடுகள் பல மில்லியன் டாலர்களை ஆய்வுகளுக்காக செலவழிக்கின்றன. இது காலத்தின் தேவையும் கூட.

இந்த பதிவு அதுபோன்ற எரிபொருள்/மின்சக்தி பிரதியீடு சம்பந்தமான ஒரு ஆய்வு பற்றியது.

JST எனப்படும் Japan Science and Technology Agency ம் JICA எனப்படும் Japan International Cooperation Agency ம் இணைந்து செயற்படுத்தும் இந்த ஆய்வுக்கு சஹாரா சூரியசக்தி வளர்ப்பு திட்டம் (Sahara Solar Breeder Project) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய அல்ஜீரிய பல்கலைகழகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் உலகின் மிக பெரிய பாலைவனமான சஹாராவை 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசிக்கு மேலான மின்சக்தியை (அதாவது சூரியசக்தி மூலமான மின்சக்தியை) உண்டாக்க வள்ள இடமாக மாற்றுவதே நோக்காகும்.

சரி இப்போ இதன் அடிப்படையை பற்றி பார்ப்போம். சூரியசக்தியை பெறுவதற்கு சூரியகலங்கள் உருவாக்கப்படவேண்டும். சூரியகலங்களின் அடிப்படை மூலம் (Basisbasis) சிலிக்கன் (சிலிக்கா அல்லது சிலிகான் டைஒக்சயிட் எனவும் கூறலாம்) எனப்படும் இரசாயண பதார்த்தம் ஆகும். இந்த சிலிக்கா சில வகையான மணலிலிருந்தே எடுக்கபடுகிறது. அதாவது சஹாரா பாலைவனத்தில் இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் சிலிக்கன் ஐ பாவித்து உண்டாக்கபடும் சூரியகலங்களில் இருந்தே மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இது பற்றி டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த Hideomi Koinuma கூறும்போது, சஹாரா பாலைவனத்தில் மிக தூய்மையான (high quality) சிலிகான் இருப்பதாகவும், உலகில் இதற்க்கு முன் இது போன்ற ஒரு ஆய்வு நடத்த படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் இதன்மூலம் உருவாக்கப்படவுள்ள மின்சாரத்தை high-temperature superconductors மூலமாக பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் இழப்புக்கள் இன்றி கடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.


தற்போது இத்திட்டம் பற்றிய முன்னோட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருகின்றன. அதில் இவர்கள் முகம் கொடுக்கவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அதற்கான பதிலீடு எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியும் அதிகமாக கவனம் எடுக்கபடுகிறது. மேலும் பாலைவனங்களில் உருவாகும் மணல்காற்றே (Sand-storm) மிக முக்கியமான பிரச்சினையாகவும் கூறபடுகிறது.


எது எவ்வாறாயினும் இது நடைமுறை படுத்தும் போது மேலும் பல எதிர்பாக்காத இன்னல்கள் வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பினும் இவற்றை எல்லாம் வெற்றி கொண்டு இந்த ஆய்வு மனித குலத்திற்கு பயனளிக்க வள்ளதாக அமைய எமது வாழ்த்துக்கள். 
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 2, 2010

சண் பிரான்சிஸ்கோவின் ஈய வளி மாசடைதலில் (Lead Air Pollution) 1/3 ஆசியாவின் பங்கு.

சூழல் மாசடைதலை நெறியாள்வது என்பது மிகப்பெரிய வேலை. இந்த நிமிடத்தில் உலகின் பெரும்பான்மையினரின் சிந்தனையும் அதுவே. மாசுபடுதலை முற்றாக தவிர்த்தல் என்பது முடியாத காரியம், ஆனால் அதனை சரியான நெறியாள்கையில் கட்டுபடுத்த முடியும். இது பற்றிய கற்றல்கள் இன்று பெரு முக்கியம் பெற்று இருக்கின்றன என்பதுவே இதனவசியத்திற்கான சாட்சி. 

வாயு அல்லது வளி மாசடைதல் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள் ஆங்கிலத்தில் air pollution என்று கூறுவார்கள். இதற்கான சரியான வரையறை பின்வருமாறு. 

வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும். இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்துவதுடன், சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கின்றது. (நன்றி: விக்கிபீடியா) 



உலகின் எங்கோ ஒரு மூலையில் வெளியாகும் வாயுக்கழிவு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை மாசடைய வைக்க கூடியது. மிக அண்மையில் அமெரிக்க DOE (Dept of Energy) ஐ சேர்ந்த விஞ்ஞானிகளினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக திடுக்கிடும் உண்மைகள் பல தெரிய வந்துள்ளன. இவ்வாறான ஒரு ஆய்வு நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என Lawrence Berkeley National Laboratory சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். சண் பிரான்சிஸ்கோவின் இரு முக்கிய இடங்களில் செய்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஈய துகல்களினது (Lead Particles) மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு  ஆசிய கண்டத்தை சேர்ந்தது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இவை பெரும்பாலும் சீனாவிலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஏழாயிரம் மைல் தொலைவிலிருந்து வந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

சீனாவில் இவ்வாறான வாயு கழிவு வெளியேற்றம் பெருமளவில் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகின் பெருமளவு Manufacture related Outsourcing அங்கு நடப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். எது எவ்வாறு இருப்பினும், ஒரு நாட்டின் வாயு கழிவுகள் அயல் நாடுகள் பலவற்றை நாசமாக்குவது ஏற்றுக்கொள்ளகூடிய விடயமன்று. சீனா மாத்திரமன்று, அமெரிக்காவின் coal plants இலிருந்து வெளியாகும் பல்வேறு வாயு கழிவுகளினால் உலகம் முழுவதுமே பாதிப்பினை எதிர்நோக்குகின்றது. 



இவ்வாறான நடவடிக்கைகளினால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஒட்சயிட்டின் (CO2) செறிவு அதிகரிக்கின்றது. வளிமண்டலத்திற்கு தெரிவதில்லை எந்த எந்த நாடுகளின் வாயு கழிவுகள் தன்னை வந்து அடைகின்றன என்பது. ஆனால் இதனால் உண்டாகும் உலகின் காலநிலை மாற்றம் உலகின் எல்லா நாடுகளிற்கும் பொதுவானதே. 

இதற்கு சரியான தீர்வு, உலகின் வாயு கழிவுகளின் சரியான நேறியாள்கையே. ஆனால் உண்மையில் இது சரியாக நடப்பதில்லை. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 30, 2010

சமூகத்திலிருந்து ஒளிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் - பகீர் சம்பவம்

2 -13 வயாதான ஐந்து குழந்தைகளை உலகம் தெரியாது பாழடைந்த வீடொன்றினுள் வைத்திருந்த சம்பவம் ஒன்று நேற்று பென்சில்வேனியாவில் அமெரிக்க அரச அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதல்கள், தடுப்பூசி அடித்ததற்கான ஆதாரங்கள், பாடசாலையில் கற்றதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடைக்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள், இந்த குழந்தைகள் நெடுங்காலமாக இவ்வாறு மறைத்து வைக்கபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



இந்த குழந்தைகளின் பெற்றோர்களான Louann Bowers உம் Sinhue Johnson உம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது குழந்தைகளை ஆபத்திற்கு உண்டாக்கிய  ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த இடத்திலுள்ள குழந்தைகள் தொடர்பான சமூக சேவைகள் மன்றத்திற்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பிலிருந்தே இந்த கைப்பற்றலை போலீசார் மேற்கொண்டு இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளை இந்த குழந்தைகளின் தாயாரான Bowers மறுத்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் Bowers அவரது 16 வது வயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது பற்றிய மேலதிக விபரங்கள் தொலைகாட்சிக்கு அளிக்கப்படவில்லை.  

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 29, 2010

மீள் சுழற்சி பைகளும் (Re-usable Bags) சூழலிற்கு நல்லதல்ல - ஆய்வு முடிவு

நெடுங்காலமாக கடதாசி, பொலிதீன் பைகளினால் பல்வேறு பட்ட சூழலியல் பிரச்சனைகளுக்கு இவ்வுலகம் முகம் கொடுத்து வந்ததை அனைவரும் அறிவர். இவை உக்குவதர்க்கு நெடும்காலம் எடுக்குமெனவும், மலை நீரினை புவிக்குள் செல்வதனை தடுக்கும் எனவும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அவை மேல் இருந்தாலும் அவை பாவனைக்கு இலகுவாகவும் விலை மிக குறைவாகவும் (துணியினால் செய்த பைகளுடன் ஒப்பிடும் போது) இருந்தமையினால் பலராலும் வெகுவாக பாவிக்கப்பட்டு வந்தது. 





பின்னர் மீள் சுழற்சி பைகளின் அறிமுகம் அதற்கு சரியான தீர்வாக அமைந்தது என பல்வேறு பட்ட சுகாதார, சூழலியல் ஆராய்சிகள் உறுதி செய்ததை அடுத்து பலரும் பரவலாக அதனை பாவிக்க தொடங்கினர். சூழல் பற்றிய கண்ணோட்டம் போது மக்களிடையே பெருமளவு ஆதரவினை பெற்றது. எங்கும் Go Green கோஷம் காதை பிளந்தது எனலாம். இதனை தொடர்ந்து உலகின் வொர்க் சொப் (world's workshop) எனப்படும் சீனாவிலிருந்து பல்வேறுபட்ட டிசைன்களுடனான பைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. அமெரிக்க ஐரோப்பிய நகரங்களில் இவைகள் மிக பிரபல்யம் அடைந்தன எனலாம்.  



இப்போது திடீரெண்டு பூகம்பம் மூண்டாற்போல் மீள் சுழற்சி பைகளும் சூழலிற்கு நல்லதல்ல என புதியதொரு ஆய்வு தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அட்செய்தி மேலும் குறிப்பிடுகையில் மீள் சுழற்சி பைகளில் ஈயம் (lead) அடங்கியிருப்பதாகவும் அது நிலக்கீழ் நீரை (ground-water) அடையும் போது பெரும் பாதிப்புக்கள் நிகழலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. 

எது எவ்வாறாயினும் இதற்கு தகுந்த பிரதியீட்டை கண்டு பிடிக்கும் வரை இதன் பாவனையே உபயோகத்தில் இருக்குமெனவும் அட்செய்தி மேலும் தெரிவிக்கிறது. பொலிதீன், கடதாசி, பிளாஸ்டிக் போன்றவைகளின் பாதிப்பினை விட இதன் பாதிப்பு குறைவாக இருப்பதனாலேயே இவ்வாறு கூறப்படுகிறது. யாருக்கு தெரியும் இதற்கு பிறகு மீண்டும் துணிகளாலான பைகளே பாவனைக்கு வருகின்றனவோ என்னவோ. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 28, 2010

குவாட்டமாலா நாட்டு soccer வீரரின் உடல் கண்டுபிடிப்பு

குவாட்டமாலா கால்பந்தாட்ட வீரரான Carlos Mercedes Vasquez இன் உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு ஐந்து பைகளில் அடைக்கப்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளதாக அந்நாட்டு போலிஸ் தெரிவித்துள்ளது. 

அவரது உடல் இருந்த பைகளுடன், இவரது மற்றைய பெண்களுடனான சகவாசமே இவரது இத்தகைய சாவுக்கு காரணம் என எழுதப்பட்ட மெசேஜ் உம் கிடைக்க பெற்றதாக போலிஸ் அறிவித்துள்ளது. இது உண்மையான காரணமாகுமா என போலிசார் விசாரித்து வருகின்றனர். 



இந்த 27 வயதான முதல் தர விளையாட்டு வீரர் நண்பர்களுடன் காரில் பயணித்த போதே கடத்தப்படிருக்கிறார். இவர் கடைசியாக குவாட்டமாலா முதல் தர கழகமான  Malacateco க்கு விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 27, 2010

எழுபது வயதிலும் இவரே சூப்பர் ஸ்டார் - Sir Cliff Richards

அமேசான் டாட் காம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பொப் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் எழுபது வயதான Sir Cliff Richards இனுடைய முகம் பொறிக்கப்பட்ட கலேன்டரே அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 





இவருடைய பல சிங்க்ள்ஸ் பலருடைய மனதையும் காலத்தால் வென்றது, குறிப்பாக இவருடைய 'Travellin' Light, A voice in the wilderness, I love you போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத பாராட்டுக்கள் பல பெற்றது. 

இந்த கலேண்டேர் விற்பனையில் இரண்டாம் இடத்தை இன்னொரு பிரித்தானிய பொப் இசை குழுவான JLS எனப்படும் Jack the lad swing பெற்றுள்ளது. முதல் இடம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட Justin Bieber மூன்றாவது இடத்தையே அடைந்துள்ளார். மேலும் நான்காவது, ஐந்தாவது இடங்களை முறையே கனடியரான Michael Buble மற்றும் பிரித்தானியரான Peter Andre அடைந்துள்ளனர். 

பெண்கள் வரிசையில் முதலிடம் வெல்வார் என எதிரு கூறப்பட்ட Lady Gaga நான்காவது இடத்தையே அடைந்தார். முதலிடத்திற்கு Cheryl Cole ம் முறையே இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் இடங்களுக்கு Kylie Minogue, Pink, kelly Brook உம் வந்தனர். 



Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 22, 2010

புலிகளுக்கு இன்னும் 12 ஆண்டுகளில் அழிவு

காட்டு புலிகளுக்கு அழிவு காலம் நெருங்கி வருகிறது என world wildlife fund (WWF) தெரிவித்துள்ளது. இது பலருக்கு ஆச்சரியத்தையும் பலருக்கு கவலையையும் வரவித்து இருக்கும் என நினைக்கிறேன்.  புலிகள் வாழ்விடம் பெருமளவில் அழிக்கபடுவதனையே முக்கிய காரணமாக WWF கூறியுள்ளது. 

அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிலேயே இந்த கருத்தை WWF தலைவர் ஜேம்ஸ் லீப் தெரிவித்தார். இந்த மேற்கூறப்பட்ட காடழிப்பு நடவடிக்கைகள் தொடருமேயானால் அடுத்த சீன புலிகளுக்கான வருடமான 2022 க்கு முன்னதாகவே இந்த இனம் அழிந்துவிடும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் புலிகளின் தோல் மற்றும் உடலுறுப்புக்கள் ஏகப்பட்ட கிராக்கி உள்ளதாலும் முக்கியமாக சீன மருத்துவத்தில் இவைகளை பெருமளவில் பயன்படுத்துவதனாலும் இந்த அழிவுகள் இடம்பெறுவதாக தெரிவித்தார். 

அதனால் உலக புலிகள் காப்பு திட்டம் அமுல் படுத்த இருப்பதாகவும் அதற்கு பெருமளவில் பணத்தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...