Pages

December 28, 2010

மனைவியின் ஈமெயிலை வாசித்தமைக்காக கணவனுக்கு சிறை

மனைவியின் ஜிமெயில் கணக்கின் பாஸ்வோர்ட்டை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்த கணவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் மிச்சிகன் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி போலீஸ் மேலும் விவரிக்கையில் லியோன் வால்கர் என்பவர் ஒரு கம்ப்யூட்டர் தொழில்நுட்பவியலாளர், இவரது மனைவியான கிளாரா வால்கர் அவரது முன்னைய கணவருடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தே லியோன், கிலாராவின் மடிகணணியை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்துள்ளார். ஆனாலும் இது அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் மற்றவர்களின் அடையாளங்களை திருடும் குற்றத்தினுள் உள்வாங்கிய நீதிமன்றம் இவருக்கு இத்தண்டனையை விதித்துள்ளது.

இந்நிகழ்வு நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே லியோன், கிளாரா தம்பதியினருக்கு விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது தன்னுடைய மடிகணணி என்றும் பாஸ்வோர்ட் தன்னை தவிர வேறு யாருக்குமே தெரியாது எனவும் கிளாரா கூறியதன் அடிப்படையிலேயே லியோனுக்கு இத்தண்டனை உறுதியாகியுள்ளதாக டிற்றோயட் போலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

so, தம்பதியினரே இது உங்களுக்கும் நிகழலாம். கவனமாக இருங்கள். ஹீ ஹீ ஹீ.


source: Washington Post
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

2 comments:

ஆமினா said...

அடப்பாவமே இந்த கொடுமை வேறைய ???!!!!

Imran Saheer said...

ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்திற்கும் சகோ

Post a Comment

பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...