Pages

November 30, 2010

சமூகத்திலிருந்து ஒளிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் - பகீர் சம்பவம்

2 -13 வயாதான ஐந்து குழந்தைகளை உலகம் தெரியாது பாழடைந்த வீடொன்றினுள் வைத்திருந்த சம்பவம் ஒன்று நேற்று பென்சில்வேனியாவில் அமெரிக்க அரச அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதல்கள், தடுப்பூசி அடித்ததற்கான ஆதாரங்கள், பாடசாலையில் கற்றதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடைக்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள், இந்த குழந்தைகள் நெடுங்காலமாக இவ்வாறு மறைத்து வைக்கபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



இந்த குழந்தைகளின் பெற்றோர்களான Louann Bowers உம் Sinhue Johnson உம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது குழந்தைகளை ஆபத்திற்கு உண்டாக்கிய  ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த இடத்திலுள்ள குழந்தைகள் தொடர்பான சமூக சேவைகள் மன்றத்திற்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பிலிருந்தே இந்த கைப்பற்றலை போலீசார் மேற்கொண்டு இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளை இந்த குழந்தைகளின் தாயாரான Bowers மறுத்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் Bowers அவரது 16 வது வயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது பற்றிய மேலதிக விபரங்கள் தொலைகாட்சிக்கு அளிக்கப்படவில்லை.  

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

2 comments:

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.வலையுலகில் வெற்றிடன் பவனி வந்து நல்ல படைப்புக்களை படைக்குமாறு அன்பாக வேண்டுகிறேன் சகோ.

Imran Saheer said...

@ asiya omar, உங்கள் வாழ்த்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரி

Post a Comment

பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...